'ம் தொடதே '




'ம் தொடாதே  '

ஒரே ஒரு முறை  மட்டும் 
தொட்டு பார்க்கிறான் 
ஆசையாக இருக்கிறது

'வேண்டாம்    தொடாதே '

அம்மாவாசை நிலவை 
உலகில் முதலில் தொட்டவன் 
நானாக இருந்துவிட்டுபோகிறேன்

'வேண்டாம் வேண்டாம்'

எட்டி  பிடித்து  விட்டேன் 
அந்த ஒரு சொட்டு இருட்டை 

அப்பாடி...

அவள் கன்னத்தில் 

மச்சம் ,,,                           
                                         
Share on Google Plus

About சங்க இலக்கிய ஆய்வு நடுவம்