எவனோ கட்டிய தாலி கயிற்றுடன் நான்கு சுவற்றுக்குள் ...

என்னிடம் எந்த அதிகாரமும் 
இல்லாத போது 
முடிவெடுக்கும்  அதிகாரம் 
மட்டும் எப்படி 
என்னிடம் இருக்கும் ...?
ஆணாக பிறந்திருந்தால் 
அதிகாரம் என் கையில் 
இருந்திருக்கும் என்ன செய்ய ...?
நன் உண்பது 
நன் உடுப்பது 
எல்லாம் என் தந்தை 
விருப்பத்திலேயே ...
எல்லாவற்றையும் 
கேட்ட மனசு 
எப்படியோ உன்னை மட்டும் 
என் அப்பாவிடம்  கேட்காமலேயே
ஆசைபட்டுவிட்டது   ...
எனக்கான 
எல்லாவற்றையும் 
தீர்மானித்துவிட்டு 
எல்ல்லாம் விதிபடிதானே
நடக்குமென சாக்கு ...
விதி 
ஆண்மைகள் ஒன்றிணைந்து 
அழகாக ஜோடித்து வைத்த
உயிர் அற்ற 
பிசாசு ...
எவனோ 
கட்டிய தாலி கயிற்றுடன்
நான்கு சுவற்றுக்குள் ...
படுக்கையறை முழுக்க 
உன் 
நினைவுகள் ...
                             
Share on Google Plus

About சங்க இலக்கிய ஆய்வு நடுவம்