உங்கள் ஆண்மை எங்களை காப்பாற்றவும் இல்லை...

கற்பும்
வீரமும்
காயடிக்கப்பட்ட
எங்கள் தேசத்தில்

முள் வேலிகளுக்குள்
கரு அறுக்கப்பட்டு வருகிறோம்

மஞ்சள்மா மேனி  என்று - இனி
யாரும் எங்களை
வர்ணிக்க   முடியாது

எங்கள் தேசத்தில்
உயிர் விடும்
கடைசி மனிதன்  கூட
மறக்க மாட்டான்
தமிழகத்தின் துரோக்கத்தை ...

கற்பழிக்கப்பட்ட நாங்கள்
வாழ்வதா ?

மடிவதா ?

உங்கள் ஆண்மை 
எங்களை
காப்பாற்றவும் இல்லை...

உங்கள் கற்பு பேதம்
எங்களை
வாழவும் விடவில்லை ...

Share on Google Plus

About சங்க இலக்கிய ஆய்வு நடுவம்