உங்கள் ஆண்மை எங்களை காப்பாற்றவும் இல்லை...
வீரமும்
காயடிக்கப்பட்ட
எங்கள் தேசத்தில்
முள் வேலிகளுக்குள்
கரு அறுக்கப்பட்டு வருகிறோம்
மஞ்சள்மா மேனி என்று - இனி
யாரும் எங்களை
வர்ணிக்க முடியாது
எங்கள் தேசத்தில்
உயிர் விடும்
கடைசி மனிதன் கூட
மறக்க மாட்டான்
தமிழகத்தின் துரோக்கத்தை ...
கற்பழிக்கப்பட்ட நாங்கள்
வாழ்வதா ?
மடிவதா ?
உங்கள் ஆண்மை
எங்களை
காப்பாற்றவும் இல்லை...
உங்கள் கற்பு பேதம்
எங்களை
வாழவும் விடவில்லை ...